T.Manohara Sundara Doss A.C.P |
ACP Anna – தலைமகன்!
பதவி சிலருக்கு அழகு சேர்க்கும். சிலர் பதவிக்கு அழகு சேர்ப்பார்கள். இதில் இரண்டாவது அண்ணாவுக்குப் பொருந்தும். எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அனைவரிடமும் மிக இயல்பாக அன்புடன் பழகுவார்கள் அண்ணா. அண்ணாவை அனைவருக்கும் பிடிக்கும். Prince-க்கு ரொம்பப் பிடிக்கும். அண்ணாவை மதிக்காதவர்கள், மனதில் போற்றாதவர்கள் யாருமே இல்லை… ACP அண்ணாவை வெள்ளத்துரை என்றும் சக பணியாளர்கள் செல்லமாகக் குறிப்பிடுவார்களாம். யாருக்கும் கெடுதல் நினைக்காத வெள்ளை உள்ளம் என்பதால்…மென்மையான அன்பு, அக்கறை அண்ணனின் தனிப் பண்பு. இந்தத் துறையில் இப்படி ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. எங்கள் தலைமுறையின் தலைமகன். சித்தப்பாக்களுக்கே அறிவுரை கூறும் தகப்பன்சாமி! சொந்த வாழ்விலும், தொழில் வாழ்விலும் எதிரிகளே இல்லாத அன்பர், அதிகாரி. ஆழமான அறிவுரையயக் கூட உறுத்தாத மொழியில் கூறும் திறமை பெற்றவர். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது சுற்றி உட்கார்ந்து புலனாய்வு சார்ந்த நிஜக்கதைகள் கேட்போம். சொல்லும் விதம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆடம்பரம் இல்லாது சிக்கனம், எளிமை கடைபிடிக்கும் மனிதர். பதவி பந்தா எதுவும் துளிகூட இல்லாமல் அனைத்து நிலை சகபணியாளரையும் அன்புடன், பரிவுடன் நடத்துபவர். கோபப்பட்டு பார்க்கமுடியாது. யார் எப்படி இருந்தாலும் தான் தன் நிலையில் மாறாது உணர்வில் சமநிலையோடே எப்போதும் இருப்பார். பசி-தூக்கம் பாராமல் 24 மணி நேரமும் பணிக்குத் தயார் நிலையில் இருப்பவர். இதற்கிடையில் உற்றார்-உறவினர்களுக்கும் நேரம் கண்டுபிடித்து உதவுவார். சிரமம் பாராமல் குடும்ப விழாக்களில் கலந்துகொள்வார். நகைச்சுவை உணர்வு, இறை பக்தி அதிகம். பெரியப்பா-பெரியம்மா இப்போது இல்லை. ஆனாலும் குடும்பத்தினர் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு அண்ணனைத் தன் சொந்த மகனாகவே உரிமை கொண்டாடுவார்கள். இவர் அருமையை முழுமையாய் உணர்ந்து போற்றும் அன்பு மகன் இவரின் வரம். மற்றபடி இவர் எங்கள் அனைவருக்கும் வரம்!! நீடூழி வாழ்க அண்ணா நீங்கள்! We are always proud of you and we salute you Anna!
Prince I wanted to write about anna for a long time. I thank you for this inspiration and the picture. Best Wishes to you for the Super-Success of the Community