ACP அண்ணா!

ep

T.Manohara Sundara Doss A.C.P

Description: This Community is for the fans of T.Manohara Sundara Doss, ASSISTANT COMMISSIONER of Police, St.Thomas Mount Chennai.He is one of the most heroic person whom i have admired a lot and also my favourite personality from childhood. He was posted & has worked in almost all the police stations in chennai during he 30 years in the Department. He is one of the most dedicated police officers,who easily finds a stable place in the hearts of other policemen who works under him. I have heard many of his co-working policemen says “ஐயா மாதிரி ஒரு சூப்பர் ஆளை பார்க்க முடியாது”. And also “‘வெட்டு ஒன்று,துண்டு ஒன்று’ என்று பேசுவார் & எடுத்த காரியத்தைக் கச்சிதமாக முடிக்காமல் விடாதவர்”. One of his famous saying is “புகை போகாத இடத்தில கூட போலீஸ் போகும்.”He is myGuru,Guardian,Advisor,Commander,Well Wisher and a very good Friend. If u r tough enough, and if u believe that its not money but power that matters in life.then join this. Its police who gives security to our life and property. Hats off to My DAD and TN Police Dept.

 

ACP Anna – தலைமகன்!

பதவி சிலருக்கு அழகு சேர்க்கும். சிலர் பதவிக்கு அழகு சேர்ப்பார்கள். இதில் இரண்டாவது அண்ணாவுக்குப் பொருந்தும். எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் அனைவரிடமும் மிக இயல்பாக அன்புடன் பழகுவார்கள் அண்ணா. அண்ணாவை அனைவருக்கும் பிடிக்கும். Prince-க்கு ரொம்பப் பிடிக்கும். அண்ணாவை மதிக்காதவர்கள், மனதில் போற்றாதவர்கள் யாருமே இல்லை… ACP அண்ணாவை வெள்ளத்துரை என்றும் சக பணியாளர்கள் செல்லமாகக் குறிப்பிடுவார்களாம். யாருக்கும் கெடுதல் நினைக்காத வெள்ளை உள்ளம் என்பதால்…மென்மையான அன்பு, அக்கறை அண்ணனின் தனிப் பண்பு. இந்தத் துறையில் இப்படி ஒரு மனிதரைப் பார்க்க முடியாது. எங்கள் தலைமுறையின் தலைமகன்.  சித்தப்பாக்களுக்கே அறிவுரை கூறும் தகப்பன்சாமி! சொந்த வாழ்விலும், தொழில் வாழ்விலும் எதிரிகளே இல்லாத அன்பர், அதிகாரி. ஆழமான அறிவுரையயக் கூட உறுத்தாத மொழியில் கூறும் திறமை பெற்றவர். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது சுற்றி உட்கார்ந்து புலனாய்வு சார்ந்த நிஜக்கதைகள் கேட்போம். சொல்லும் விதம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆடம்பரம் இல்லாது சிக்கனம், எளிமை கடைபிடிக்கும் மனிதர். பதவி பந்தா எதுவும் துளிகூட இல்லாமல் அனைத்து நிலை சகபணியாளரையும் அன்புடன், பரிவுடன் நடத்துபவர். கோபப்பட்டு பார்க்கமுடியாது. யார் எப்படி இருந்தாலும் தான் தன் நிலையில் மாறாது உணர்வில் சமநிலையோடே எப்போதும் இருப்பார். பசி-தூக்கம் பாராமல் 24 மணி நேரமும் பணிக்குத் தயார் நிலையில் இருப்பவர். இதற்கிடையில் உற்றார்-உறவினர்களுக்கும் நேரம் கண்டுபிடித்து உதவுவார். சிரமம் பாராமல் குடும்ப விழாக்களில் கலந்துகொள்வார். நகைச்சுவை உணர்வு, இறை பக்தி அதிகம்.  பெரியப்பா-பெரியம்மா இப்போது இல்லை. ஆனாலும் குடும்பத்தினர் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு அண்ணனைத் தன் சொந்த மகனாகவே  உரிமை கொண்டாடுவார்கள். இவர் அருமையை முழுமையாய் உணர்ந்து போற்றும் அன்பு மகன் இவரின் வரம். மற்றபடி இவர் எங்கள் அனைவருக்கும் வரம்!! நீடூழி வாழ்க அண்ணா நீங்கள்! We are always proud of you and we salute you Anna!

Prince I wanted to write about anna for a long time. I thank you for this inspiration and the picture. Best Wishes to you for the Super-Success of the Community

 

Published by அம்மாமகள்

பசுங்கிளி-மகாலிங்கம் அவர்களின் மகள்; தட்சிணாவின் அம்மா; மகி, மாலினிக்கு சகோதரி; விச்சு-ரித்துவுக்கு சித்தி; அமித் குட்டிக்கு பெரியம்மா. ஊர் சுற்றும் நேரங்களிலும் உருப்படியாக ஏதாவது பகிர-பதிய விருப்பம். எனக்கென ஒரு இடம். அம்மா-மகளுக்காக அவர்கள் இருவரின் பெயரிலேயே எழுதுகிறேன். அம்மா இப்போதே படிப்பார்கள். மகள் எப்போதாவது படிப்பாள்-நம்புகிறேன்!

பின்னூட்டமொன்றை இடுக